புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

குயிலோசை

    காலையில் கதிரவன்
        கண் விளிக்க
    காலை புலர்ந்தது
        கதிரொளி பரந்தது

    காலையென்று அறியாமல்
        கன்துயில் கொள்ளலாமோ
    காலை விடிந்தது
        கண்விளித்து வாடி

    சேவல் கூவுது
        செந்தாமரை விரியுது
    கோயில்மணி அடிக்குது
        கூடிக்காகம் கரையுது

    பசுவும் பால் சொரியுத
        பசுக்கன்றும் துள்ளிக் குதிக்குது
    பசும்புல் நுனியில் தங்கிய
        பனித் துளியும் மறையுது

    பூக்கள் எல்லாம் விரியுது
        புதுமணம் எங்கும் பரவுது
    பாக்கள் தீட்டிய
        பாவலர் இருப்பது பாரடியோ.

    பஞ்சனையில் படுத்துறங்கியது போதும்
        பள்ளிச் சிறுவர் படிப்பதைக் கேளடி
    கொஞ்சமும் கூச்சம் இல்லாமல்
        குறட்டை விட்டுத் தூங்கலாமோடி 


தி.வேல்நம்பி
Velnampy, T Dr

முனைவர் திருநாவுக்கரசு வேல்நம்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் முகாமைத்துவத்துறையில் முதுநிலை விரிவுரையாளராக உள்ளார். இவர் கணக்கியல், வர்த்தகம், முகாமைத்துவம் தொடர்பில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார். இந்தப் பயிற்சியும் தேடலும் தமிழ் மரபு பண்புசார் புலங்களுடன் ஊடாடி புதிய ஆய்வுத் தோற்றப்பாடுகள் உருவாக்கவும் ஆர்வம் கொண்டவராக உள்ளார். முகாமைத்துவச் சிந்தனையாளர் தமிழியல் ஆய்வுச் செல்நெறிகளுள் உள்வாங்கப்படுகின்றார். இதன் இன்னொரு வெளிப்பாடாகவே முகாமைத்துவமும் திருக்குறளும் என்னும் நூல் அமைகின்றது.